Thursday, November 22, 2012

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்


ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் 
=============================================
நன்றி வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை

ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பது தான் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று ஆகிவிட்டது.

நம் நாட்டில் சித்த வைத்தியம் தான் சிறப்பாகவும், சீராகவும் இருந்து                 வந்
தது.  அதை அடிப்படையாகவும் வைத்தியர்களை மனதில் வைத்தும் சொல்லப்பட்டதுதான் இது.

வைத்தியன் என்பவர் குறைந்தபட்சம் 50,000 வேர், செடி, கொடிகளை எடுத்து இலைகளைப் பறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும். அதுபோல, குறைந்த பட்சம் ஆயிரம் வேரையாவது கொன்றிருந்தால் தான் அரை வைத்தியனாகவாவது ஆகியிருக்க முடியும் என்ற அடிப்படையில் சொன்னதுதான் இந்தப் பழமொழி.

Friday, November 9, 2012

HistoryofDhosai


தோசை பெயர் தோற்றம்
=========================

தோசை = சுடும்போது இருமுறை "சை" யென்ற ஓசை கேட்பது. இஃது ஒரு வேடிக்கைக் கூற்று............

தோய்தல் என்றால் மாப்புளித்தல்; தோய் என்பது தோயை என்றாகி பின்னர் தோசை என்றாகியது.

தோசைக்கல்லில் வட்டமாகத் தேய்த்து செய்யப்படும் உணவுப்பண்டமாதலால் தேய்+செய் என்ற சொற்களே மாறி தோசை என்றாகியது.

Reference : ஞா.தேவநேயப்பாவாணர். செந்தமிழ்ச் செல்வி, மார்ச்சு 1967, மொழியாராய்ச்சிக் கட்டுரைகள், பக்கம் 60