Thursday, November 22, 2012

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்


ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் 
=============================================
நன்றி வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை

ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பது தான் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று ஆகிவிட்டது.

நம் நாட்டில் சித்த வைத்தியம் தான் சிறப்பாகவும், சீராகவும் இருந்து                 வந்
தது.  அதை அடிப்படையாகவும் வைத்தியர்களை மனதில் வைத்தும் சொல்லப்பட்டதுதான் இது.

வைத்தியன் என்பவர் குறைந்தபட்சம் 50,000 வேர், செடி, கொடிகளை எடுத்து இலைகளைப் பறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும். அதுபோல, குறைந்த பட்சம் ஆயிரம் வேரையாவது கொன்றிருந்தால் தான் அரை வைத்தியனாகவாவது ஆகியிருக்க முடியும் என்ற அடிப்படையில் சொன்னதுதான் இந்தப் பழமொழி.

No comments:

Post a Comment